யாழ்.திருநெல்வேலி சந்திக்கு அருகில் இன்று அதிகாலை கோர விபத்து..! 4 பேர் படுகாயம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.திருநெல்வேலி சந்திக்கு அருகில் இன்று அதிகாலை கோர விபத்து..! 4 பேர் படுகாயம்..

யாழ்.திருநெல்வேலி சந்திக்கு அண்மையில் இன்று அதிகாலை இடம்பெற்ற கோர விபத்தில் 4 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

பட்டா ரக வாகனம் கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்களை மோதி தள்ளியதுடன், வீதியில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்துடன் மோதி விபத்துக்குள்ளானது. 

சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்கள் உட்பட 4 பேர் படுகாயமடைந்த நிலையில் உடனடியாக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு