ஒரு மோட்டார் சைக்கிளில் 3 பேர், கட்டுப்பாடற்ற வேகத்தினால் நடந்த கோர விபத்து..! 15 வயது சிறுவன் பலி..

ஆசிரியர் - Editor I
ஒரு மோட்டார் சைக்கிளில் 3 பேர், கட்டுப்பாடற்ற வேகத்தினால் நடந்த கோர விபத்து..! 15 வயது சிறுவன் பலி..

ஒரு மோட்டார் சைக்கிளில் பயணித்த 3 பேர் விபத்துக்குள்ளானதில் 15 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் திருகோணமலை - உயர்மலை பகுதியில் நேற்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது. 

மோட்டார் சைக்கிளில் மூவர் பயணித்த நிலையில் கட்டுப்பாடற்ற வேகத்தினால் இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

திருகோணமலை சுமேதகம பகுதியைச் சேர்ந்த சஹன் (15வயது) என்ற சிறுவனே உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்விபத்தில் காயமடைந்த மற்றவர்கள் திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன், உயிரிழந்தவரின் சடலம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

விபத்து தொடர்பிலான விசாரணைகளை திருகோணமலை தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு