யாழ்.மாவட்டத்திற்கு தேவையான எரிபொருளை பெற்றுக் கொள்ள பேச்சுவார்த்தை..! யாழ்.மாவட்ட செயலர் க.மகேஸன்..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்திற்கு தேவையான எரிபொருளை பெற்றுக் கொள்ள பேச்சுவார்த்தை..! யாழ்.மாவட்ட செயலர் க.மகேஸன்..

யாழ்.மாவட்டத்துக்கு தேவையான எரிபொருளை தொடர்ச்சியாக விநியோகிப்பதற்கு தேவையான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளதாக யாழ்.மாவட்டச் செயலர் க.மகேஸன் கூறியிருக்கின்றார். 

யாழ்.மாவட்டத்துக்கு நாள் ஒன்றுக்கு 1 இலட்சம் லீற்றர் பெற்றோல் தேவைப்படுகிறது. ஆனால் தற்போது நாளொன்றுக்கு 1 இலட்சத்து 30 ஆயிரம் லீற்றர் பெற்றோல் தேவைப்படுகிறது. இதற்கு தட்டுப்பாடு ஏற்படும் என்ற எண்ணத்தில் 

மக்கள் அதிமாக பெற்றோலை கொள்வனவு செய்வதே காரணமாகும் என்றார்.இதேவேளை நாள் ஒன்றுக்கு டீசல் 1 இலட்சத்து 25 ஆயிரத்துக்கும் 1 இலட்சத்து 50 ஆயிரத்துக்கும் இடைப்பட்ட அளவில் தேவையாகவுள்ளதுடன் நாளொன்றுக்கு 

50 ஆயிரம் லீற்றர் மண்ணெண்ணையும் தேவைப்படுகிறது. இந்நிலையில் எரிபொருளை தொடர்ச்சியாக விநியோகிப்பதற்கு ஏற்ற வகையில், நான் கலந்துரையாடி வருகின்றேன். இவ்வாறானதொரு சூழ்நிலையில் 

எரிபொருளை மக்கள் சிக்கனமாக பயன்படுத்தும் அதேவேளை அதிகளவில் எரிபொருளை கொள்வனவு செய்ய வேண்டாமென கோருகின்றேன்.தற்போது கையிருப்பிலுள்ள பெற்றோலை வைத்து இப்பொது சமாளிக்க முடிகின்றது. 

இதேவேளை வேறு இடத்தில் உள்ள மக்களும் இங்கே வந்து டீசலை கொள்வனவு செய்வதுடன் வெளி மாவட்ட பயணங்களில் ஈடுபடும் வாகனங்களும் அதிகளவில் எரிபொருளை கொள்வனவு செய்யும் நிலையும் காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு