மதுபோதையில் சிறுவர் பூங்காவுக்குள் நுழைந்து வயோதிபர் உட்பட இருவர் மீது தாக்குதல்..!

ஆசிரியர் - Editor I
மதுபோதையில் சிறுவர் பூங்காவுக்குள் நுழைந்து வயோதிபர் உட்பட இருவர் மீது தாக்குதல்..!

சிறுவர் பூங்காவுக்குள் மதுபோதையில் நுழைந்த வன்முறை கும்பல் பூங்காவில் பணியாற்றிய முதியவர் உள்ளிட்ட இருவரை தாக்கிவிட்டு தப்பி சென்றுள்ளது. 

குறித்த சம்பவம் வவுனியா சிறுவர் பூங்காவில் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, 

NP AAS 0351 என்ற இலக்கமுள்ள முச்சக்கர வண்டி ஒன்றில் சிறுவர் பூங்காவிற்குள் நுழைந்த குழுவினர் அங்கு பணியாற்றிக்கொண்டிருந்த முதியவரை கண்மூடித்தனமாக தாக்கினர்.

இதனை அவதானித்த நபர் ஒருவர் அதனை தடுக்க முற்பட்டபோது அவரையும் தாக்கி காயப்படுத்தியதுடன் அவரது தொலைபேசியையும் உடைத்துவிட்டு தப்பிச்சென்றுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக அவசர காவல்துறைக்கு தகவல் தெரிவித்தபோதும் நீண்டநேரமாகியும் சம்பவ இடத்திற்கு அவர்கள் சமுகமளிக்கவில்லை. 

என பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு