யாழ்ப்பாணத்திலிருந்து சென்று கொள்ளையடித்துவிட்டு மீண்டும் யாழ்ப்பாணம் வந்து பதுங்கியிருந்த 3 கொள்ளையர்கள் கைது!

ஆசிரியர் - Editor I
யாழ்ப்பாணத்திலிருந்து சென்று கொள்ளையடித்துவிட்டு மீண்டும் யாழ்ப்பாணம் வந்து பதுங்கியிருந்த 3 கொள்ளையர்கள் கைது!

யாழ்ப்பாணத்திலிருந்து சென்று முல்லைத்தீவு நகர் பகுதியில் உள்ள வீடொன்றில் கடந்த டிசம்பர் மாதம் 20 பவுண் நகைகளை கொள்ளையடித்த 3 பேர் கொண்ட கும்பல் யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

சாவகச்சோி - நெல்லியடி - ஊர்காவற்துறை பகுதிகளை சேர்ந்த குறித்த 3 பேரும் கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 17 பவுண் நகையும் மீட்கப்பட்டுள்ளதாகவும் குறித்த திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய 

மேலும் பலர் கைது செய்யப்பட உள்ளதாகவும் தெரிவித்தார். கைது செய்யப்பட்டவர்கள் ஏற்கனவே பல குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்கள் 

என யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு