யாழ்.உரும்பிராய் பகுதியில் வீடொன்றில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் களவு! கோண்டாவில் பகுதியில் மீட்பு..

ஆசிரியர் - Editor I
யாழ்.உரும்பிராய் பகுதியில் வீடொன்றில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் களவு! கோண்டாவில் பகுதியில் மீட்பு..

யாழ்.உரும்பிராய் இந்துக்கல்லுாரிக்கு அருகிலிருந்து திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் கோண்டாவல் அரசடி பிள்ளையார் கோவில் பகுதியில் மீட்கப்பட்டுள்ளது. 

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் திருடப்பட்டது.

குறித்த சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து கோப்பாய் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால் 

கோண்டாவில் பகுதியில் குறித்த மோட்டார் சைக்கிள் மீட்கப்பட்ட நிலையில் சந்தேக நபர் தலைமறைவாகி உள்ளார்.

சந்தேகநபரை கோப்பாய் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர் தேடி வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு