யாழ்.சிறுப்பிட்டியில் வன்முறை கும்பல் வீடு புகுந்து வாள்வெட்டுக் குழு தாக்குதல், பெற்றோல் குண்டும் வீச்சு..!

ஆசிரியர் - Editor I
யாழ்.சிறுப்பிட்டியில் வன்முறை கும்பல் வீடு புகுந்து வாள்வெட்டுக் குழு தாக்குதல், பெற்றோல் குண்டும் வீச்சு..!

யாழ்.புத்துார் சிறுப்பிட்டி - கலையொளி பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் நுழைந்த வன்முறை கும்பல் வீட்டின் மீது தாக்குதல் நடத்தியதுடன், பெற்றோல் குண்டும் வீசியுள்ளது. 

குறித்த சம்பவம் நேற்று அதிகாலை இடம்பெற்றுள்ளது. வாகனம் ஒன்றில் வந்த 5 பேர் கொண்ட வன்முறை கும்பல் ஒன்றே தாக்குதல் நடத்தியுள்ளதுடன், 

வீட்டின் மீது பெற்றோல் குண்டையும் வீசிவிட்டு தப்பி ஓடியுள்ளது. பின்னர் வீதி ஓரத்தில் வாள் ஒன்று மீட்கப்பட்டதுடன், 

சம்பவத்திற்கு தனிப்பட்ட பகையே காரணமாக இருக்கலாம். என கூறியுள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு