யாழ்.கசூரினா கடலில் நண்பர்களுடன் குளிக்க சென்றவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு..!

ஆசிரியர் - Editor I
யாழ்.கசூரினா கடலில் நண்பர்களுடன் குளிக்க சென்றவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு..!

மதுபோதையில் கடலில் குளிக்க சென்ற முதியவர் கடலில் மூழ்கி உயரிழந்த சம்பவம் காரைநகர் கசூரினா கடலில் நேற்று இடம்பெற்றுள்ளது. 

குளியாப்பிட்டிய பகுதியை சேர்ந்த 57 வயதான அன்டன் ஜேக்கப் என்பவர் தொழில் நிமித்தம் மண்டைதீவில் தங்கியிருந்த நிலையில் நண்பர்களுடன் 

நேற்று மாலை கசூரினா கடற்கரைக்கு குளிக்க சென்றிருந்தார். இதன்போது கடல் அலையில் இழுத்துச் செல்லப்பட்ட நிலையில் காணாமல்போனார். 

பின்னர் அவருடன் சென்றிருந்த நண்பர்கள் கடலில் தேடி அவரை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்தபோதும் அவர் உயிரிழந்துள்ளார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு