முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா யாழ்ப்பாணம் விஜயம்! நல்லுாரில் சிறப்பு வழிபாடு..

ஆசிரியர் - Editor I
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா யாழ்ப்பாணம் விஜயம்! நல்லுாரில் சிறப்பு வழிபாடு..

யாழ்.மாவட்டத்திற்கு விஜயம் செய்துள்ள முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா  நல்லுார் கந்தசுவாமி ஆலயத்தில் சிறப்பு வழிபாடு நடத்தியுள்ளார். 

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மாநாடு இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ள நிலையில் இன்றைய தினம் காலை முன்னாள் ஜனாதிபதி யாழ்ப்பாணம் வருகைதந்தார். 

இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் வரவேற்றதுடன் நல்லுார் கந்தசுவாமி ஆலயத்தில் வழிபாடுகளிலும் கலந்துகொண்டார். 

மேலும் முன்னாள் ஜனாதிபதியுடன் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முக்கியஸ்த்தர்களும் கலந்துகொண்டிருக்கின்றனர். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு