யாழ்.தென்மராட்சியில் கொரோனா அபாயம் உச்சம்! 2 மாதங்களில் 113 தொற்றாளர்கள், 3 மரணங்கள் பதிவு..

ஆசிரியர் - Editor I
யாழ்.தென்மராட்சியில் கொரோனா அபாயம் உச்சம்! 2 மாதங்களில் 113 தொற்றாளர்கள், 3 மரணங்கள் பதிவு..

யாழ்.சாவகச்சோி ஆதார வைத்தியசாலையில் இவ்வருடம் 2 மாதங்களில் 113 கொரோனா தொற்றாளர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களில் 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகவும் வைத்தியசாலை தகவல்கள் தொிவிக்கின்றன. 

அந்தவகையில் ஜனவரி மாதத்தில் 72 கொரோனா நோயாளர்களும், பெப்ரவரி மாதம் இதுவரை 41 கொரோனா நோயாளர்களுமாக மொத்தமாக 113 கொரோனா நோயாளர்கள் வைத்தியசாலையின் கொரோனா சிகிச்சை விடுதியில் சிகிச்சை பெற்றுள்ளனர்.

இவர்கள் அனைவரும் வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட அன்ரிஜன் மற்றும் பீ.சி.ஆர் பரிசோதனைகளில் கொரோனா நோயாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.மேலும், இந்தாண்டு இதுவரை 30 டெங்கு நோயாளர்கள் 

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. பெப்ரவரி மாதம் இதுவரை 08 டெங்கு நோயாளர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு