யாழ்.திருநெல்வேலியில் கை குண்டு மீட்பு! பொலிஸாரின் தொடர் கண்காணிப்பில் பிரதேசம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.திருநெல்வேலியில் கை குண்டு மீட்பு! பொலிஸாரின் தொடர் கண்காணிப்பில் பிரதேசம்..

யாழ்.திருநெல்வேலி - கேணியடி பகுதியில் கை குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, திருநெல்வேலி - கேணியடி பகுதியிலுள்ள காணியொன்றில் வீட்டுக்கான அத்திவாரம் வெட்டியபோது குறித்த கை குண்டு மீட்கப்பட்டுள்ளது. 

சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து விசேட அதிரடிப்படையின் உதவியுடன் குண்டு மீட்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த கிடங்கை வெட்டும்போது ஏதேனும் வெடிபொருட்கள் இருக்கலாம் என்ற சந்தேகத்தில் கோப்பாய் பொலிசார் கண்காணித்து வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு