அடுத்தடுத்து இரு வீடுகளில் கொள்ளை..! 20 வயதான இளைஞன் கொள்ளையடித்த நகைகளுடன் கைது..

ஆசிரியர் - Editor I
அடுத்தடுத்து இரு வீடுகளில் கொள்ளை..! 20 வயதான இளைஞன் கொள்ளையடித்த நகைகளுடன் கைது..

இரு வீடுகளில் இடம்பெற்ற கொள்ளை சம்பவம் தொடர்பில் 20 வயதான இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளதுடன், திருடப்பட்ட நகைகளையும் பொலிஸார் மீட்டுள்ளனர். 

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, வவுனியா - குருமன்காடு மற்றும் வைரவப்புளியங்குளம் பகுதிகளில் இரு வீடுகளில் புகுந்து சுமார் 5 பவுண் தங்க நகைகள் கொள்ளையிடப்பட்டிருந்தது. 

இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்திருந்தனர். இதனடிப்படையில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், 

வவுனியா - சகாயமாதாபுரம் பகுதியை சேர்ந்த 20 வயதான இளைஞனை கைது செய்துள்ளதுடன், அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளையும் மீட்டிருக்கின்றனர். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு