யாழ்.சண்டிலிப்பாயில் இளைஞனிடமிருந்து தொலைபேசி பறிப்பு..! வழிப்பறி சந்தேகநபர் கைது..

ஆசிரியர் - Editor I
யாழ்.சண்டிலிப்பாயில் இளைஞனிடமிருந்து தொலைபேசி பறிப்பு..! வழிப்பறி சந்தேகநபர் கைது..

வீதியில் நின்று தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்த நபரிடமிருந்து தொலைபேசியை பறித்துச் சென்ற குற்றச்சாட்டில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

யாழ்.சண்டிலிப்பாய் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் காரைநகர் வீதியில் நின்று கைத்தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்துள்ளார். இதன்போது அந்த வீதியால் வந்த நபர் ஒருவர் தொலைபேசியை பறித்துக் கொண்டு தப்பி ஓடியுள்ளார். 

இது குறித்து மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில் சந்தேகநபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு