யாழ்.பல்கலைகழக மாணவர்கள் போராட்டம் முடிந்தது! இன்று மாணவர் ஒன்றியம் அமைக்கப்படுமாம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.பல்கலைகழக மாணவர்கள் போராட்டம் முடிந்தது! இன்று மாணவர் ஒன்றியம் அமைக்கப்படுமாம்..

யாழ்.பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் மாணவர்களது போராட்ட இடத்திற்கு சென்று, இன்ற காலை 9 தொடக்கம் மாலை 4 மணிவரையான நேரத்திற்குள் மாணவர் ஒன்றியம் அமைப்பதாக உறுதிமொழியை வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து நேற்று காலை தொடக்கம் மாணவர்கள் நடத்திய முடக்க போராட்டத்தை கைவிட்டு, பல்கலைக்கழகத்தின் நுழைவாயில்களை திறந்துவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர்.

அந்தவகையில் இன்றைய தினம் பிரதான மாணவர் ஒன்றியமும், கலைப்பீட மாணவர் ஒன்றியமும் அமைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு