யாழ்.எழுதுமட்டுவாழ் பகுதியில் விபத்து! மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் படுகாயம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.எழுதுமட்டுவாழ் பகுதியில் விபத்து! மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் படுகாயம்..

யாழ்.கொடிகாமம் பகுதியில் நேற்றைய தினம் வான் மற்றும் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. 

கொடிகாமத்தில் இருந்து வருகை தந்த வானும் யாழ்ப்பாணத்தில் இருந்து கொடிகாமம் நோக்கி சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளும்,

எழுதுமட்டுவாழ் பகுதியில் நேருக்கு நேர் மோதியதில் குறித்த அனர்த்தம் இடம்பெற்றது. 

விபத்தில் மோட்டார் சைக்கிள சாரதி காயமடைந்த நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

சம்பவம் தொடர்பில் கொடிகாமம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு