வெளிநாடு செல்வதற்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் பீ.சி.ஆர் பரிசோதனை செய்ய காத்திருப்போருக்கான அறிவித்தல்..!

ஆசிரியர் - Editor I
வெளிநாடு செல்வதற்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் பீ.சி.ஆர் பரிசோதனை செய்ய காத்திருப்போருக்கான அறிவித்தல்..!

வெளிநாடு செல்வதற்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் பீ.சி.ஆர் பரிசோதனை செய்து கொள்வதற்கு கட்டணம் அறவிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து பணிப்பாளர், வைத்திய கலாநிதி கே.நந்தகுமார் மேலும் தெரிவித்துள்ளதாவது, நாளை வெள்ளிக்கிழமை (18) முதல் 6500 ரூபாய் அறவிடப்படும். 

மத்திய சுகாதார அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைவாக இக்கட்டணம் அறவிடப்படுவதாக தெரிவித்துள்ளார். 

இதேவேளை கடந்த தினங்களில் வெளிநாட்டு பிரஜைகளுக்கான பரிசோதனைக்காக 5 ஆயிரம் ரூபாய் அறவிடப்பட்டு வந்ததுடன், 

இலங்கை பிரஜைகளுக்கு முதல் தடவை பரிசோதனை இலவசமாக மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்நிலையிலையே நாளை முதல் சகலருக்கும் பி.சி.ஆர் பரிசோதனைக்காக 

6500 ரூபாய் அறவிடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு