யாழ்.பல்கலைகழக நுழைவாயிலை மூடி மாணவர்கள் முடக்கப் போராட்டம்..!

ஆசிரியர் - Editor I
யாழ்.பல்கலைகழக நுழைவாயிலை மூடி மாணவர்கள் முடக்கப் போராட்டம்..!

யாழ்.பல்கலைகழக நுழைவாயிலை மூடி இன்று காலை மாணவர்கள் பாரிய முடக்கல் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். 

கடந்த பல மாதங்களாக செயழிழந்து கிடக்கும் யாழ்.பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தை அங்கீகரிக்குமாறுகோரியும், 

இன்று காலை தொடக்கம் பிரதான நுழைவாயிலை மூடி மாணவர்கள் போராட்டம் நடாத்திவருகின்றனர். 

இந்நிலையில் பல்கலைகழக ஊழியர்கள், ஆசிரியர்கள், உள்நுழைய முடியாத நிலையேற்பட்டிருக்கின்றது. 

இதனையடுத்து துணைவேந்தர் ஸ்ரீசற்குணராஜா இன்றைய தினம் பரீட்சைகள் நடந்துகொண்டிருப்பதால் வாயில் கதவை திறக்கும்படியும், 

பிரச்சினைகள் தொடர்பாக பேசுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படும் எனவும் மாணவர்களிடம் கூறியிருந்தார். 

எனினும் எழுத்தில் முன்வைத்த கோரிக்கை 4 மாதங்களாக எடுக்கப்படவில்லை. என கூறி மாணவர்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு