யாழ்.சாவகச்சோி - இல்வாரை குளத்தில் தவறி விழுந்து உயிரிழந்த வயோதிப பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி..!

ஆசிரியர் - Editor I
யாழ்.சாவகச்சோி - இல்வாரை குளத்தில் தவறி விழுந்து உயிரிழந்த வயோதிப பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி..!

யாழ்.சாவகச்சோி - மட்டுவில் கிழக்கு இல்வாரை குளத்தில் தவறி விழுந்து உயிரிழந்த வயோதிப பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

மட்டுவில் கிழக்கைச் சேர்ந்த கிருஸ்ணன் சரஸ்வதி (வயது-72) என்ற மூதாட்டியே உயிரிழந்துள்ளார்.

இவரது மகனுக்கு கடந்த திங்கள் கிழமை திருகோணமலையில் திருமணம் நடந்துள்ளது என்றும், இவர் நேற்றுமுன்தினம் 

இல்வாரை வைரவர் ஆலயத்துக்குச் சென்றபோது, ஆலயத்தின் முன்னுள்ள குளத்தில் தவறி வீழ்ந்துள்ளார் என்றும் கூறப்படுகின்றது.

குளத்தில் மீன்பிடிக்கச் சென்றவர்கள், சடலம் மிதப்பதைக் கண்டு உறவினர்களுக்கு அறிவித்துடன், சடலத்தையும் மீட்டுள்ளனர். 

இவரது உடல் சாவகச்சேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சடலத்தின் மீது நடத்தப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில்

கொரோனாத் தொற்றுன் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு