யாழ்.வட்டுக்கோட்டை அராலியில் வீடு புகுந்து 15 லட்சம் பெறுமதியான நகைகள் கொள்ளை..!

ஆசிரியர் - Editor I
யாழ்.வட்டுக்கோட்டை அராலியில் வீடு புகுந்து 15 லட்சம் பெறுமதியான நகைகள் கொள்ளை..!

யாழ்.வட்டுக்கோட்டை - அராலி தெற்கில் உள்ள வீடொன்றுக்குள் புகுந்த கொள்ளை கும்பல் வீட்டிலிருந்த சுமார் 15 லட்சம் பெறுமதியான தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளது. 

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, வீட்டிலுள்ளவர்கள் நேற்றுமுன்தினம் (14) உறவினர் வீட்டுக்கு சென்று நேற்று மாலை விட்டிற்கு திரும்பி வந்து பார்த்தவேளை வீட்டின் கதவு திறந்திருந்தது.

 உள்ளே சென்று பார்த்தபோது அலுமாரியில் இருந்த நகை களவாடப்பட்ட விடயம் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக வட்டுக்கோட்டை பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

வட்டுக்கோட்டை பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.11 பவுண் தாலிக்கொடி, 1 1/2 பவுண் சங்கிலி என்பன இவ்வாறு திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு