யாழ்.தென்மராட்சி - மீசாலை மற்றும் சரசாலை பகுதிகளில் இருவருக்கு ஒரே நேரத்தில் கொரோனா மற்றும் டெங்கு தொற்றுக்கள் உறுதி செய்யப்பட்டுள்ளது..

ஆசிரியர் - Editor I
யாழ்.தென்மராட்சி - மீசாலை மற்றும் சரசாலை பகுதிகளில் இருவருக்கு ஒரே நேரத்தில் கொரோனா மற்றும் டெங்கு தொற்றுக்கள் உறுதி செய்யப்பட்டுள்ளது..

யாழ்.தென்மராட்சி - மீசாலை மற்றும் சரசாலை பகுதிகளில் இருவருக்கு கொரோனா தொற்றுடன் டெங்கு காய்ச்சலும் அடையாளம் காணப்பட்டுள்ளது. 

மீசாலை கிழக்கை சேர்ந்த 21 வயதான இளைஞருக்கும், சரசாலை பகுதியை சேர்ந்த 34 வயதான இளைஞருக்குமே இவ்வாறு இரு தொற்றும் உறுதி செய்யப்பட்டுள்ளது. 

தீவிர காய்ச்சல் காரணமாக சாவகச்சோி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அன்டிஜன் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. 

அதன் பெறுபேறுகளில் இருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், டெங்கு காய்ச்சலும் உறுதி செய்யப்பட்டுள்ளது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு