வெளிநாடு செல்லவுள்ளோருக்கான அறிவிப்பு..! யாழ்.போதனா வைத்தியசாலையில் இடைநிறுத்தப்பட்டிருந்த சேவை இன்று முதல் ஆரம்பம்..

ஆசிரியர் - Editor I
வெளிநாடு செல்லவுள்ளோருக்கான அறிவிப்பு..! யாழ்.போதனா வைத்தியசாலையில் இடைநிறுத்தப்பட்டிருந்த சேவை இன்று முதல் ஆரம்பம்..

யாழ்.போதனா வைத்தியசாலையில் இடைநிறுத்தப்பட்டிருந்த பீ.சி.ஆர் பரிசோதனை சேவைகள் இன்று தொடக்கம் மீள ஆரம்பிக்கப்டும் என போதனா வைத்தியசாலை பணிப்பாளர் நந்தகுமாரன் தெரிவித்துள்ளார்.

வெளிநாடு செல்வோருக்கான பிசிஆர்பரிசோதனைகள் கடந்த வாரம் முதல் யாழ் போதனா வைத்தியசாலையில் இடைநிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. 

நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட வந்த சுகாதார தொழிற்சங்கங்களின் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக வெளிநாடு செல்வோருக்கான பீ.சி.ஆர் பரிசோதனைகளை வைத்தியசாலையில் மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்ட

இந்நிலையில் இன்று முதல் மீளவும் வெளிநாடு செல்வோருக்கான பிசிஆர் பரிசோதனைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு