வடக்கில் தொடரும் கொரோனா அபாயம்..! 12 வயது சிறுவன் உட்பட 14 தொற்றாளாகள், ஒரு மரணமும் பதிவு..

ஆசிரியர் - Editor I
வடக்கில் தொடரும் கொரோனா அபாயம்..! 12 வயது சிறுவன் உட்பட 14 தொற்றாளாகள், ஒரு மரணமும் பதிவு..

யாழ்.போதனா வைத்தியசாலை மற்றும் யாழ்.பல்கலைகழக மருத்துவபீடம் ஆகியவற்றில் நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனைகளில் மேலும் 14 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

யாழ்.போதனா வைத்தியசாலையில் 30 பேருக்கு நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் 6 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதேபோல் மருத்துவ பீடத்தில் 26 பேருக்கு நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் 8 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

அடையாளம் காணப்பட்ட 14 தொற்றாளர்களில் 12 வயதான சிறுவன் ஒருவனும், 22, 23 வயதான இரு இளைஞர்களும் உள்ளடங்கியுள்ளதுடன், வவுனியா பொது வைத்தியசாலையில் 58 வயதான நபர் ஒருவர் கொரோனா தொற்றால் இறந்துள்ளார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு