3 மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்து..! ஒருவர் பலி, பெண் உட்பட இருவர் கைது..

ஆசிரியர் - Editor I
3 மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்து..! ஒருவர் பலி, பெண் உட்பட இருவர் கைது..

மூன்று மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் இருவர் கைது செய்யப்பட்டள்ளனர். 

குறித்த சம்பவம் வவுனியா - மரக்காரம்பளை வீதியில் இன்று காலை இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, 

குளுமாட்டுச்சந்தியில் இருந்து கணேசபுரம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த குறித்த இளைஞர் எதிரே வந்துகொண்டிருந்த இரு மோட்டார் சைக்கிள்களுடன் மோதி இந்த விபத்து இடம்பெற்றது.

இவ்விபத்தில் படுகாயமைடந்த இளைஞர் உடனடியாக மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

சம்பவ இடத்திற்கு சென்ற நெளுக்குளம் காவல்துறையினர் இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணையினை மேற்கொண்டு வருவருகின்றனர்.

விபத்துடன் தொடர்புடைய ஏனைய இரு மோட்டார் சைக்கிள் சாரதிகளான இளைஞர் ஒருவரையும், பெண் ஒருவரையும் கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் உயிரிழந்த இளைஞன் பண்டாரிக்குளத்தினை சேர்ந்த ஸ்ரீரஞ்சன் வயது – 32 என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு