யாழ்.மானிப்பாய் பகுதியில் வீடொன்றில் தகாத நடவடிக்கை..! 2 பெண்கள் உட்பட 3 பேர் கைது..

ஆசிரியர் - Editor I
யாழ்.மானிப்பாய் பகுதியில் வீடொன்றில் தகாத நடவடிக்கை..! 2 பெண்கள் உட்பட 3 பேர் கைது..

யாழ்.மானிப்பாய் பகுதியில் வீடொன்றில் தகாத நடவடிக்கை இடம்பெற்றதான குற்றச்சாட்டில் மானிப்பாய் பொலிஸார் குறித்த வீட்டை முற்றுகையிட்டு சோதனை நடத்தியதுடன் 3 பேரை கைது செய்துள்ளனர். 

குறித்த சம்பவம் நேற்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியில் உள்ள வீடு ஒன்றில் தகாத நடவடிக்கைகள் நடப்பதாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. 

இதன் அடிப்படையில் குறித்த வீட்டினை முற்றுகையிட்ட பொலிஸார் அங்கு சோதனையிட்டுள்ளனர். இதன்போது சந்தேகத்தின் அடிப்படையில் 55 வயது மற்றும் 51 வயதான இரு பெண்கள் மற்றும் 42 வயதான ஆண் ஒருவர் உட்பட 3 பேரை கைது செய்திருக்கின்றனர். 

மேலதிக விசாரணைகளையும் மானிப்பாய் பொலிஸார் முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு