யாழ்.போதனா வைத்தியசாலைக்குள் நடந்தது விசம செயலா..? பொலிஸ் விசாரணைகள் ஆரம்பம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.போதனா வைத்தியசாலைக்குள் நடந்தது விசம செயலா..? பொலிஸ் விசாரணைகள் ஆரம்பம்..

யாழ்.போதனா வைத்தியசாலையில் பொருத்தப்பட்டுள்ள 15 மில்லியன் ரூபாய் பெறுமதியான எக்ஸ்- ரே இயந்திரம் உடைக்கப்பட்டுள்ள நிலையில் அது வேண்டுமென்றே உடைக்கப்பட்டதா? என கண்டறிய பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது. 

யாழ்.போதனா வைத்தியசாலையின் அதி நவீன எக்ஸ் - ரே இயந்திரம் மிக அண்மையில் பொருத்தப்பட்ட நிலையில் இயந்திரத்தில் ஒரு முக்கியமான பகுதி 2 வாரங்களுக்கு முன்னர் வேண்டுமென்றே குத்தி உடைக்கப்பட்டிருக்கலாம். 

என சந்தேகிக்கப்படும் நிலையில் வைத்தியசாலை நிர்வாகத்தினால் யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. முன்னரும் ஒரு தடவை இயந்திரத்தின் முக்கிய பகுதி களவாடப்பட்ட நிலையில் அது கண்டுபிடிக்கப்படவில்லை. 

இந்நிலையில் புதிய இயந்திரம் பொருத்தப்பட்டு 4வது நாளில் முக்கிய பகுதி உடைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பொலிஸ் தடயவியல் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு