தீ காயங்களுடன் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 4 மாத கர்ப்பவதி பெண் மரணம்..!

ஆசிரியர் - Editor I
தீ காயங்களுடன் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 4 மாத கர்ப்பவதி பெண் மரணம்..!

யாழ்.நெல்லியடி பகுதியில் தற்கொலைக்கு முயற்சித்த நிலையில் காப்பாற்றப்பட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 4 மாத கர்ப்பவதி பெண் 7 நாட்களின் பின் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

மிதுனராஜா ரொபினா (வயது 28) என்ற 4 மாத கர்ப்பவதி பெண் குடும்ப தகராறு காரணமாக தனக்கு தானே தீ மூட்டி தற்கொலைக்கு முயன்ற நிலையில் காப்பாற்றப்பட்டு கடந்த 6ம் திகதி பருத்தித்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். 

இந்நிலையில் நேற்று காலை சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு