யாழ்ப்பாணத்திலிருந்து சென்ற கார் மீது இ.போ.ச பேருந்து மோதி கோர விபத்து! 5 பேர் காயம்..

ஆசிரியர் - Editor I
யாழ்ப்பாணத்திலிருந்து சென்ற கார் மீது இ.போ.ச பேருந்து மோதி கோர விபத்து! 5 பேர் காயம்..

யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா சென்ற கார் மீது இ.போ.ச பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் 5 பேர் காயமடைந்துள்ளனர். 

குறித்த சம்பவம் நேற்று கனகராயன்குளம் பகுதியில் இடம்பெற்றிருக்கின்றது. யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா சென்ற கார், 

கனகராயன்குளம் பகுதியில் வீதியின் மறுபக்கம் திரும்ப முயற்சித்துள்ளது. இதன்போது அவ் வீதியால் பயணித்த இ.போ.ச பேருந்து, 

கார் மீது மோதியதுடன் பின்னர் வீதியை விட்டு விலகி மதிலை மோதி தள்ளியதுடன்டு வீட்டு வளவுக்குள் நுழைந்து நின்றுள்ளது. 

இந்த விபத்தில் 5 பேர் படுகாயமடைந்துள்ளனர். விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கனகராயன்குளம் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு