சுவிஸ் நாட்டிலிருந்து வந்து யாழ்.கோண்டாவிலில் தங்கியிருந்தவர்கள் வீட்டில் 62 பவுண் நகைகள் கொள்ளை..! வீட்டு கூரை பிரித்து கொள்ளையர்கள் துணிகரம்..

ஆசிரியர் - Editor I
சுவிஸ் நாட்டிலிருந்து வந்து யாழ்.கோண்டாவிலில் தங்கியிருந்தவர்கள் வீட்டில் 62 பவுண் நகைகள் கொள்ளை..! வீட்டு கூரை பிரித்து கொள்ளையர்கள் துணிகரம்..

யாழ்.கோண்டாவில் கலைவாணி வீதி பகுதியில் வீட்டு கூரையை பிரித்து உள்நுழைந்த கொள்ளை கும்பல் வீட்டிலிருந்த சுமார் 62 பவுண் நகைகள் மற்றும் பணம், பொருட்களை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

சுவிஸிலுள்ள குடும்பமொன்று அண்மையில் விடுமுறையில் வந்து, கோண்டாவிலிலுள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்துள்ளனர்.

அந்த வீட்டுக்காரர்களும், சுவிஸ் குடும்பமும் நேற்று காலையில் வீட்டை விட்டு புறப்பட்டு நல்லூருக்கு சென்றிருந்தனர். இதன்போது வீட்டின் கூரையை பிரித்து நுழைந்த கொள்ளை கும்பல் நகைகள், பணம், பொருட்களை கொள்ளையடித்து சென்றுள்ளது.

வீட்டிலிருந்து சென்றவர்கள் மாலையில் வீடு திரும்பியதுடன் அலுமாரியில் பொருட்கள் கிளறியிருந்ததை அவதானித்து, மறைத்து வைக்கப்பட்டிருந்த பொருட்களை தேடியபோது, அவை திருடப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இது தொடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர். பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு