யாழ்.மாநகரில் வெளிநாட்டு சுற்றுலா பயணி உட்பட 10 பேரை பதம் பார்த்த நாய்! பொதுமக்களின் உதவியை நாடியுள்ள யாழ்.மாநகரசபை..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாநகரில் வெளிநாட்டு சுற்றுலா பயணி உட்பட 10 பேரை பதம் பார்த்த நாய்! பொதுமக்களின் உதவியை நாடியுள்ள யாழ்.மாநகரசபை..

யாழ்.நகர் பகுதியில் வெளிநாட்டு சுற்றுலா பயணி ஒருவர் உட்பட 10 பேரை கட்டாக்காலி நாய் ஒன்று கடித்துள்ளது. 

யாழ்.நகர் மத்தியில் கஸ்தூரியார் வீதி , மின்சார நிலைய வீதி என்பனவற்றில் நேற்று மதியம் முதல் மாலை வரையிலான நேரத்தினுள் 10க்கும் மேற்பட்டவர்களை நாய் கடித்துள்ளது. 

அதில் வெளிநாட்டு சுற்றுலா பயணி ஒருவருக்கு இரண்டு கால்களிலும் நாய் கடித்துள்ளது. அதேவேளை அப்பகுதிகளில் சுமார் 10க்கும் மேற்பட்டவர்களை குறித்த நாய் கடித்துள்ளது.

சம்பவம் தொடர்பில் யாழ்.மாநகர சபை உறுப்பினர் வ.பார்த்தீபனுக்கு அறிவிக்கப்பட்ட நிலையில், 

குறித்த நாயினை மாநகர சபை ஊழியர்கள் ஊடாக பிடிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டபோதிலும், நாய் தொடர்பிலான தகவல்கள் தெரியாமையால் நாயினை பிடிக்க முடியவில்லை என தெரிவித்துள்ளனர்.

குறித்த நாய் தொடர்பிலான தகவல்கள் தெரிந்தவர்கள் மாநகர சபைக்கு அறிவிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு