யாழ்.பல்கலைகழகத்தில் அடையாள வேலை நிறுத்தப் போராட்டம்..!

ஆசிரியர் - Editor I
யாழ்.பல்கலைகழகத்தில் அடையாள வேலை நிறுத்தப் போராட்டம்..!

அனைத்துப் பல்கலைகழக தொழிற்சங்க கூட்டு குழுவினால்  26.01.2022இல் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு வழங்கப்பட்ட கடிதத்தின் பிரகாரம் யாழ்.பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினால் நேற்றய தினம் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.

இந்த போராட்டத்தில் 2016ம் ஆண்டின் வரவுசெலவுத் திட்டத்தின்படி மேற்கொள்ளப்பட்ட அடிப்படைச் சம்பளத்தின் அதிகரிப்பானது, அரச சேவைப் பணியாளர்களுடன் ஒப்பிடும்போது பேராசிரியர் தரத்தினைத் தவிர்ந்த ஏனைய பல்கலைக்கழகப் பணியாளர்களுக்கு 15வீதம் குறைவானதாகும். 

அதனடிப்படையில் இச்சம்பள உயர்வு கோரிக்கையானது பல்கலைக்கழக கல்விசாரா பணியாளர்களுக்கு மட்டுமல்லாது பல்கலைக்கழக ஆசிரியர்களுக்கும் பல்கலைக்கழக நிர்வாக உத்தியோகத்தர்களுக்கும் பொதுவானது என்பது குறிப்பிடத்தக்கது.

பாதுகாப்பு பணியாளர்கள் மற்றும் நீர்வழங்கல் சேவைப் பணியாளர்கள் தவிர்ந்த ஏனைய சகல கல்விசாரா பணியாளர்களையும் இப்போராட்டத்தில் பங்கு பற்றியிருந்தனர்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு