யாழ்.காங்கேசன்துறை - வறுத்தலைவிளான் விபத்தில் 18 வயது இளைஞன் சம்பவ இடத்திலேயே பலி! மேலும் ஒருவர் படுகாயம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.காங்கேசன்துறை - வறுத்தலைவிளான் விபத்தில் 18 வயது இளைஞன் சம்பவ இடத்திலேயே பலி! மேலும் ஒருவர் படுகாயம்..

யாழ்.காங்கேசன்துறை - வறுத்தலைவிளான் பகுதியில் டிப்பர் வாகனமும் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளான 18 வயதான இளைஞன் உயிரிழந்துள்ளார்

சம்பவத்தில் இளவாலை, உயரப்புலத்தை சேர்ந்த 18 வயதுடைய சசிக்குமார் லிசான் என்பவரே உயிரிழந்துள்ளார்.

தெல்லிப்பழை சாந்தை வீதி வறுத்தலைவிளான் பகுதியில் இன்றைய தினம் வியாழக்கிழமை காலை மணல் ஏற்றி வந்த டிப்பர் வாகனமும் மோட்டார் சைக்கிலும் நேருக்கு நேர் மோதியதிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. 

குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார்.

அதேவேளை அவருடன் பயணித்த மற்றுமொரு  இளைஞர் படுகாயமடைந்த நிலையில் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்து சம்பவம் தொடர்பில் டிப்பர் சாரதி காங்கேசந்துறை பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு