யாழ்.கொடிகாமம் - வேம்பிராய் பகுதியில் விபத்து..! 8 வயது சிறுமி உட்பட 3 பேர் படுகாயம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.கொடிகாமம் - வேம்பிராய் பகுதியில் விபத்து..! 8 வயது சிறுமி உட்பட 3 பேர் படுகாயம்..

யாழ்.கொடிகாமம் - வேம்பிராய் பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் 8 வயது சிறுமி உட்பட 3 பேர் படுகாயமடைந்துள்ளனர். 

புத்தூர் வீதி ஊடாக பயணித்த இரண்டு மோட்டார் சைக்கிள்களில் ஒன்று மீசாலை- வேம்பிராய் பகுதியில் கிளை வீதி ஒன்றினுள் திருப்ப முற்பட்டவேளையில் 

பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் மோதி இவ்விபத்து சம்பவித்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

விபத்தில் மந்துவில் மேற்கு பகுதியைச் சேர்ந்த 8 வயது சிறுமி கால் முறிந்த நிலையிலும், 37வயதான அவரது தாய் தலையில் படுகாயமடைந்த நிலையிலும், 

மீசாலை வடக்கைச் சேர்ந்த 17 வயது இளைஞன் காலில் காயமடைந்த நிலையிலும் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து குறித்த மூவரும் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

விபத்துத் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடிகாமப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு