யாழ்.கச்சதீவு அந்தோனியார் ஆலய திருவிழாவில் இந்திய பக்தர்களை அனுமதிப்பதற்கான ஒப்புதல் இதுவரை கிடைக்கவில்லை..!

ஆசிரியர் - Editor I
யாழ்.கச்சதீவு அந்தோனியார் ஆலய திருவிழாவில் இந்திய பக்தர்களை அனுமதிப்பதற்கான ஒப்புதல் இதுவரை கிடைக்கவில்லை..!

யாழ்.கச்சதீவு அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த உற்சபத்தில் இந்திய பக்தர்களும் கலந்து கொள்வதற்கு உத்தியோகபூர்வ அனுமதி இதுவரை எமக்கு கிடைக்கவில்லை. என மாவட்டச் செயலர் க.மகேஸன் கூறியுள்ளார். 

இன்று மாலை ஊடகங்களை சந்தித்து கருத்து தொிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், இந்திய பக்தர்களும் கலந்து கொள்வதற்கான கோரிக்கை முன்வைக்கப்பட்டது. 

அதனை சுகாதார அமைச்சு உள்ளிட்ட பொறுப்புவாய்ந்த தரப்புக்களின் கவனத்திற்கு கொண்டு சென்றிருக்கின்றோம். எனினும் இதுவரை எமக்கு உத்தியோகபூர்வமான அனுமதி எதுவும் கிடைக்கப்பெறவில்லை. 

கொவிட் 19 நிலைமைகளுடன் இந்த விடயம் சம்மந்தப்பட்டுள்ளதால் சுகாதார அமைச்சு உள்ளிட்ட தரப்புக்களின் அனுமதி கட்டாயம். எனவே அவர்களுடைய அனுமதி இதுவரை கிடைக்கவில்லை என மாவட்ட செயலர் கூறியுள்ளார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு