யாழ்.நெடுந்தீவு கடற்பரப்பில் 11 மீனவர்கள் கைது! 3 படகுகளை கைப்பற்றியது கடற்படை..

ஆசிரியர் - Editor I
யாழ்.நெடுந்தீவு கடற்பரப்பில் 11 மீனவர்கள் கைது! 3 படகுகளை கைப்பற்றியது கடற்படை..

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து கடற்றொழில் ஈடுபட்ட 11 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்கள் பயணித்த 3 படகுகள் மீட்கப்பட்டிருக்கின்றது. 

நேற்று நள்ளிரவு நெடுந்தீவு அருகே இந்திய மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட கடற்படையினர் ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த மூன்று படகுகளையும் 

அதில் இருந்த 11 மீனவர்களையும் கைது செய்தனர்.கைது செய்யப்பட்டவர்கள் கடற்படையினரால் மயிலிட்டி மீன் பிடி துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ள நிலையில் மீனவர்களுக்கு மலேரியா, 

கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு மீன்பிடி நீரியள் வள திணைக்கள அதிகாரிகளிடம் சட்ட நடவடிக்கைக்காக கையளிக்கப்படவுள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு