யாழ்.தீவகத்தில் கட்டுக்கடங்காமல்போயுள்ள கால்நடை திருட்டு..! பொறுப்புவாய்ந்தோர் திணறுவதாக மக்கள் சாடல்..

ஆசிரியர் - Editor I
யாழ்.தீவகத்தில் கட்டுக்கடங்காமல்போயுள்ள கால்நடை திருட்டு..! பொறுப்புவாய்ந்தோர் திணறுவதாக மக்கள் சாடல்..

யாழ்.ஊர்காவற்றுறை - சரவணை மற்றும் வேலணை பகுதிகளில் கால்நடைகளை திருடி விற்பனை செய்யும் சம்பவங்கள் கட்டுக்கடங்காமல் போயுள்ளதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். 

நேற்று அதிகாலையிலும சரவணை பகுதியில் ஒரு மாடும் வேலணை பகுதியில் மூன்று மாடுகளுமே இவ்வாறு இறைச்சிக்காக வெட்டப்பட்டுள்ளன. கால்நடைகள் மேய்ச்சல் தரவையில் கட்டப்பட்டிருந்த மாடுகளை 

அவிழ்த்துச் சென்ற மர்ம நபர்கள் இறைச்சிக்காக வெட்டிவிட்டு கழிவுகளை பற்றைக்குள் வீசிவிட்டுச் சென்றனர். இது தொடர்பாக மாடுகளின் உரிமையாளர்களால் ஊர்காவற்றுறை பொலிஸாருக்கு முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.

தீவகப் பகுதிகளில் தொடர்ச்சியாக வளர்ப்பு மாடுகள் இறைச்சிக்காக வெட்டப்படும் சம்பவங்கள் பதிவாகி வருகின்ற நிலையில் இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு