யாழ்.கச்சதீவு அந்தோனியார் ஆலய திருவிழாவில் இந்திய - இலங்கை மீனவர்களிடையே பேச்சுவார்த்தை! தமிழக பக்தர்களுக்கு அனுமதி...

ஆசிரியர் - Editor I
யாழ்.கச்சதீவு அந்தோனியார் ஆலய திருவிழாவில் இந்திய - இலங்கை மீனவர்களிடையே பேச்சுவார்த்தை! தமிழக பக்தர்களுக்கு அனுமதி...

யாழ்.கச்சதீவு அந்தோனியார் ஆலயத்தின் வருடாத்த திருவிழாவில் இந்திய பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும். என கூறியுள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இலங்கை - இந்திய மீனவர்கள் பிரச்சினை அங்கு பேசப்படும் எனவும் கூறியுள்ளார்.

எதிர்வரும் மார்ச் மாதம் 11 மற்றும் 12 ஆம் திகதிளில் நடைபெறவுள்ள கச்சதீவு திருவிழாவில்  இந்தியாவில் இருந்து பக்தர்கள் கலந்து கொள்வதற்கு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அனுமதி வழங்குவதில்லை என்று ஏற்பாடு குழு  தீர்மானித்திருந்தது.

இந்நிலையில், தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலினின் ஆலோசனையின்படி  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் தொலைபேசியில் உரையாடிய திராவிட முன்னேற்றக் கழகத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரிடம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்படி விடயங்கள் தெரிவித்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு