யாழ்.மாவட்டத்தில் பல இடங்களில் வீடுகளுக்குள் புகுந்து வாளை காட்டி அச்சுறுத்தி தொடர் கொள்ளையில் ஈடுபட்டுவந்த கொள்ளை கும்பல் சிக்கியது..!

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் பல இடங்களில் வீடுகளுக்குள் புகுந்து வாளை காட்டி அச்சுறுத்தி தொடர் கொள்ளையில் ஈடுபட்டுவந்த கொள்ளை கும்பல் சிக்கியது..!

யாழ்.புன்னாலைக்கட்டுவன் பகுதியில் ஓடு பிரித்து வீட்டுக்குள் நுழைந்து வாளை காட்டி கொள்ளையில் ஈடுபட்ட கும்பல்  யாழ்.மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவிடம் சிக்கியுள்ளது.

கடந்த வருடம் டிசம்பர் மாதம் 17ஆம் திகதி யாழ்.புன்னாலைக்கட்டுவன் பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர் ஒருவருடைய வீட்டில் இரவு வேளை வீட்டின் ஓடு பிரித்து உள்நுழைந்த கொள்ளையர்கள் 

வீட்டில் இருந்தவர்களைத் தாம் கொண்டு வந்த கூரிய வாளைகே காட்டி மிரட்டி மூன்றரைப் பவுண் நகையையும், சி.சி.ரி.வியையும் கொள்ளையடித்துச் சென்றனர்.

இது தொடர்பில் சுன்னாகம் பொலிஸாரிடம் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது. இதேவேளை, நல்லூர் சங்கிலியன் வீதியிலுள்ள வீட்டினுள் இரவுவேளை உள்நுழைந்த குறித்த சந்தேகநபர்கள் 

அங்கிருந்தவர்களை மிரட்டி 3 பெறுமதி வாய்ந்த தொலைபேசிகளையும் ஒன்றரைப் பவுண் தங்க நகையையும் கொள்ளையடித்துச் சென்றனர்.

இது தொடர்பில் யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது. மேலும், கல்வியங்காட்டுப் பகுதியிலுள்ள வியாபார நிலையத்துக்குள் நுழைந்த கொள்ளையர்கள் 

அங்கிருந்தவர்களை ஆயுதமுறையில் மிரட்டி பெறுமதி வாய்ந்த பொருட்களைக் கொள்ளையடித்துச் சென்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு