யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கான வீதி சர்ச்சை தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் நேரில் ஆராய்வு..!

ஆசிரியர் - Editor I
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கான வீதி சர்ச்சை தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் நேரில் ஆராய்வு..!

யாழ்.வலிகாமம் வடக்கு கட்டுவன் - மயிலிட்டி வீதி சர்ச்சை தொடர்பாக தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், கட்சியின் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் நேரில் பார்வையிட்டு ஆராய்ந்துள்ளார்.

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கான பாதையில் 400 மீற்றர் பாதையை அபகரித்துள்ள படையினர் வீதியை விட மறுத்து தனியாருக்குச் சொந்தமான நிலத்தின் ஊடாக தற்போது பாதை அமைக்கும் விடயம்  சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் இன்றைய தினம் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து பார்வையிட்டதோடு சட்டப்படி சுவீகரிக்காது நில உரிமையாளரின் சம்மதம் இன்றி அவர்களின் கிணறுகளை இடித்து அழித்து அதன் மேல் புதிய வீதிகளை அமைக்கின்றனர்.

அதனை தேரில் பார்வையிட்டு அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பில் ஆராய்வதற்காகவே சம்பவ இடத்திற்கு வரெகை தந்த்தாக குறிப்பிட்டதோடு அடுத்த கட்டமாக இந்த விடயமும் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளதாகத் தெரிவித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு