தீராத தலைவலியால் 20 வருடங்கள் அவதி!! -தலையை ஸ்கேன் செய்து பார்த்த போது கிடைத்த அதிர்ச்சி ரிப்போர்ட்-

ஆசிரியர் - Editor II
தீராத தலைவலியால் 20 வருடங்கள் அவதி!! -தலையை ஸ்கேன் செய்து பார்த்த போது கிடைத்த அதிர்ச்சி ரிப்போர்ட்-

சீனா நாட்டில் வசிக்கும் ஒருவருக்கு சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக தலைவலி இருந்ததால் மிகுந்த அபவதிக்கு உள்ளாகியிருந்தார். 

இறுதியாக எம்.ஆர்.ஐ ஸ்கேன் செய்து பார்த்ததில், அவரது மண்டை ஓட்டில் புல்லட் ஒன்று சிக்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதில், ஆச்சரியம் என்ன என்றால், தனது தலையில் புல்லட் எப்படி வந்தது என்பது குறித்து அவருக்கும் காரணம் தெரியவில்லை.

தற்போது இந்த நபருக்கு 28 வயது ஆகிறது. தனக்கு 8 வயது இருந்தபோது, தன்னுடைய சகோதரரும், தானும் விளையாடிக் கொண்டிருந்ததாகவும், அப்போது அவர் பயன்படுத்திய ஏர்கன் மூலமாக இந்த புல்லட் பாய்ந்திருக்க கூடும் என்றும் தெரிவித்த அவர் இவ்விடயம் தொடர்பில் மருத்து சிகிச்சை பெறப்போவதாக தெரிவித்துள்ளார். 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு