யாழ்.திருநெல்வேலி சந்தையில் தொடர் கொள்ளையில் ஈடுபட்டவந்த நபர் கைது! கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அதிரடி..

ஆசிரியர் - Editor I
யாழ்.திருநெல்வேலி சந்தையில் தொடர் கொள்ளையில் ஈடுபட்டவந்த நபர் கைது! கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அதிரடி..

யாழ்.திருநெல்வேலி சந்தையில்  தொடர் திருட்டில் ஈடுபட்டிருந்த நபர் ஒருவரை கோப்பாய் பொலிஸார் கைது செய்துள்ளனர். 

சந்தையில் வகுப்பு வேலை செய்துவரும் குறித்த நபர் வியாபாரிகளிடமும், நுகர்வோரிடமும் தொடர்ச்ச்சியாக கொள்ளையில் ஈடுபட்டுவந்துள்ளார். 

மூடைகளில் இருந்து பொருட்களை திருடுவது, அதிக பணத்தை மிரட்டி வாங்குவது மற்றும் வியாபாரிகள், நுகர்வோரின் மூடைகளை துாக்கி கொண்டு தலைமறைவாகுவது

என பல்வேறு முறைப்பாடுகள் பாதிக்கப்பட்ட தரப்புக்களால் கோப்பாய் பொலிஸாரிடமும், நல்லுார் பிரதேசசபையிடமும் முன்வைக்கப்பட்டது. 

இதனடிப்படையில் இன்று காலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி விசாரணைகளை முன்னெடுத்து குறித்த நபரை கைது செய்துள்ளார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு