யாழ்.பருத்தித்துறை மீனவர்களிடம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மன்னிப்புகோரி, பதவி விலகவேண்டும்! சாணக்கியன் கூறுகிறார்..

ஆசிரியர் - Editor I
யாழ்.பருத்தித்துறை மீனவர்களிடம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மன்னிப்புகோரி, பதவி விலகவேண்டும்! சாணக்கியன் கூறுகிறார்..

யாழ்.மாவட்டத்தில் நியாயமான கோரிக்கையுடன் போராட்டம் நடத்திவரும் மீனவர்களை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டிருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீனவர்களிடம் பகிரங்கமாக மன்னிப்புகோர வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கூறியுள்ளார்.

பருத்தித்துறை – சுப்பர்மடம் பகுதியில் போராட்டத்தை முன்னெடுத்துள்ள மீனவர்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ சுமந்திரனும், இரா.சாணக்கியனும் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இதன்போது மீனவர்கள் மத்தியில் கருத்து வெளியிடும்போதே தமிழ்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில்,

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மீனவர்களுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கருத்து வெளியிட்டிருந்தார். மீனவர்கள் மதுபோதையில் இருப்பதாக அவர் குறிப்பிட்டிருந்தார். 

இந்த கருத்து குறித்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீனவர்கள் மத்தியில் பகிரங்கமாக மன்னிப்பு கோர வேண்டும். அத்துடன், மீனவர்களின் கோரிக்கையினை நிறைவேற்ற முடியாத அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா 

உடனடியாக பதவி விலக வேண்டும். எனக் குறிப்பிட்டுள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு