யாழ்.மாவட்டச் செயலகம் மற்றும் A-9 வீதியை முடக்கி போராட்டம் ஆரம்பமானது..!

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டச் செயலகம் மற்றும் A-9 வீதியை முடக்கி போராட்டம் ஆரம்பமானது..!

யாழ்.மாவட்டச் செயலகம் மற்றும் A-9 வீதியை முடக்கி மீனவர்கள் இன்று காலை தொடக்கம் கவனயீர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். 

யாழ்.மாவட்ட செயலகத்துக்கு செல்லும் பிரதான மூன்று வாயில்களையும் முடக்கி  கடற்றொழிலாளர் சம்மேளனத்தினர் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

அத்துமீறும் இந்திய படகுகளை கைது செய்யகோரியும் உயிரிழந்த இரண்டு மீனவர்களுக்கு நீதி கோரியும் இந்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

பொலிஸார் மற்றும் போக்குவரத்து பொலிஸார் A-9 வீதி ஊடாக வருகின்ற வாகனங்களை மாற்று பாதையில் செல்லுமாறு கூறி வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு