யாழ்.வட்டுக்கோட்டை - சங்கரத்தையில் வீட்டு ஜன்னல் கண்ணாடியை உடைத்து உட்புகுந்து கொள்ளை..!

ஆசிரியர் - Editor I
யாழ்.வட்டுக்கோட்டை - சங்கரத்தையில் வீட்டு ஜன்னல் கண்ணாடியை உடைத்து உட்புகுந்து கொள்ளை..!

யாழ்.வட்டுக்கோட்டை - சங்கரத்தை ஓடக்கரை வீதியில் உள்ள வீடொன்றின் ஜன்னல் கண்ணாடியை உடைத்து உள்நுழைந்த திருடர்கள் பணம் மற்றும் நகையை கொள்ளையடித்து சென்றிருக்கின்றனர். 

குறித்த சம்பவம் நேற்று மதியம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, வீட்டின் உரிமையாளர் கிளிநொச்சி பனை தென்னை அபிவிருத்தி சங்கத்தில் கடமையாற்றிவருகின்ற நிலையில் 

நேற்றும் அவர் கடமைக்கு சென்றிருந்தார். அவரது மனைவி, மகளை பாடசாலையில் இருந்து தனது தாயார் வீட்டிற்கு அழைத்துச் சென்றுவிட்டு பி.ப 4 மணியளவில் வீட்டிற்கு வந்துள்ளார்.

இதன்போது வீட்டின் கண்ணாடி உடைக்கப்பட்டு ஒரு பவுண் நகையும் பத்தாயிரம் ரூபா பணமும் களவாடப்பட்ட விடயம் தெரியவந்துள்ளது. அதனையடுத்து வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. 

சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு