மாகாணசபை தேர்தலில் போட்டியிட கட்சிக்குள் குடும்பி பிடி சண்டை..! ஆனால் 13ம் திருத்தச்சட்டம் வேண்டாம் என்றால், தீர்வு என்ன?

ஆசிரியர் - Editor I
மாகாணசபை தேர்தலில் போட்டியிட கட்சிக்குள் குடும்பி பிடி சண்டை..! ஆனால் 13ம் திருத்தச்சட்டம் வேண்டாம் என்றால், தீர்வு என்ன?

13ம் திருத்தச்சட்டம் வேண்டாம் என கூறும் தமிழ்தேசிய மக்கள் முன்னணியிடம் உள்ள தீர்வு பொறிமுறை என்ன? தீர்வுக்காக அவர்கள் எடுக்கும் முயற்சிகள் என்ன? என புளொட் கட்சியின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் கேள்வி எழுப்பியுள்ளார். 

இன்று காலை தமிழ் கட்சிகளின் தலைவர்கள் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். மக்கள் மத்தியில் பொய் சொல்வதற்கு தகுதி வேண்டும் 13வது திருத்தச் சட்டத்தினை நாங்கள் தீர்வாக ஏற்றுக் கொண்டோம் 

என கஜேந்திரகுமார் அணியினர் பொய் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார்கள். அவ்வாறு பொய் பிரச்சாரம் மேற்கொள்பவர்கள் என்ன தீர்வினை முன் வைக்கப் போகிறார்கள் அல்லது தீர்வு விடயத்தில் என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள் என்று கூறமுடியுமா? 

ஏன் அவர்கள் இவ்வாறு செயற்படுகிறார்கள் என தெரியவில்லை. அதேநேரம் கஜேந்திரகுமார் அணியினர் எதிர்வரும் மாகாணசபை தேர்தலில் போட்டியிடவுள்ளார்கள் யாரை முதலமைச்சராக முட்படுத்துவது என்பது தொடர்பில் கட்சிக்குள் போட்டி நிலை காணப்படுகின்றது. 

அவ்வாறான நிலையில் ஏன் இவ்வாறு மக்களை குழப்பும் செயற்பாட்டில் ஈடுபடுகிறார்கள் என நான் கேட்க விரும்புகின்றேன் அத்தோடு அவர்களது கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் அதாவது தேர்தல் ஆணையாளருக்கு அனுப்பியுள்ள தேர்தல் விஞ்ஞாபனத்தில் 

அவர்கள் என்ன தீர்வினை முன் வைத்திருக்கிறார் என்று யாருக்கும் தெரியுமா ? அவர்களுடைய தீர்வு ஒற்றையாட்சிக்குள் அமைகின்றது எனவே மக்களை இனியும் அவர்கள் மாற்றிக் கொண்டிருக்க முடியாது 

மக்களுக்கு நன்கு விளங்கும் இவர்கள் பொய்யுரைக்கின்றார்கள் என்றார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு