அறுபடை இயந்திரம் ஏற்றிச் சென்ற உழவு இயந்திரம் மீது மோட்டார் சைக்கிள் மோதி கோர விபத்து! ஒருவர் பலி, மற்றொருவர் படுகாயம்..

ஆசிரியர் - Editor I
அறுபடை இயந்திரம் ஏற்றிச் சென்ற உழவு இயந்திரம் மீது மோட்டார் சைக்கிள் மோதி கோர விபத்து! ஒருவர் பலி, மற்றொருவர் படுகாயம்..

முல்லைத்தீவு - மாந்தை கிழக்கு  பாண்டியன்குளம் பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானதுடன், மேலும் ஒருவர் படுகாயத்துடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

நெல்லு வெட்டும் இயந்திரத்தை காவி சென்ற உழவு இயந்திரம் மீது மோதியே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது. சம்பவத்தில் அனுராதபுரம் பகுதியை சேர்ந்த ரவீந்திர நிக்கசீல என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானதுடன், 

செல்வபுரம்  பகுதியை சேர்ந்த விமல் விக்னேஸ் என்பவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றார். 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு