இலங்கை கடல் எல்லைக்குள் நுழைந்த குற்றச்சாட்டில் கைதான 55 இந்திய மீனவர்களும் நிபந்தனை அடிப்படையில் விடுதலை..!

ஆசிரியர் - Editor I
இலங்கை கடல் எல்லைக்குள் நுழைந்த குற்றச்சாட்டில் கைதான 55 இந்திய மீனவர்களும் நிபந்தனை அடிப்படையில் விடுதலை..!

இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டில் கைதான 55 இந்திய மீனவர்களையும் நிபந்தனையுடன் விடுதலை செய்ய ஊர்காவற்றுறை நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியிருக்கின்றது. 

நெடுந்தீவு மற்றும் எழுவைதீவு அருகே கடந்த வருடம் டிசம்பரில் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்டிருந்த இந்திய மீனவர்கள் 55 பேருக்கான ஆறு மாதகால சாதாரண சிறை ஐந்து வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இவர்களது கைவிரல் அடையாளங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் 5 வருட காலத்தில் மீண்டும் இலங்கை பகுதிக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டால் அவர்களை உடனடியாக கைது செய்வதற்கும் நீதவான் கஜநிதிபாலன் உத்தரவிட்டார். 

ஊர்காவற்றுறை நீதிமன்றில் இந்த வழக்கு எடுக்கப்பட்ட நிலையில் இந்திய மீனவர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில் இலங்கை குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் ஊடாக இந்தியாவிற்கு அனுப்புவதற்கு 

நடவடிக்கை எடுக்கவும் நீதவான் உத்தரவிட்டார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு