யாழ்.மருதனார்மடம், உரும்பிராய் சந்திகளில் விபத்துக்களை தடுக்க சமிக்ஞை விளக்குகள்! பொலிஸார் கோரிக்கை..

ஆசிரியர் - Editor I
யாழ்.மருதனார்மடம், உரும்பிராய் சந்திகளில் விபத்துக்களை தடுக்க சமிக்ஞை விளக்குகள்! பொலிஸார் கோரிக்கை..

யாழ்.உரும்பிராய் மற்றும் மருதனார்மடம் சந்திகளில் சமிக்ஞை விளக்குகள் பொருத்த நடவடிக்கை எடுங்கள் என பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர். 

வீதி விபத்துக்களை தடுக்க உரும்பிராய் சந்தி மற்றும் மருதனார்மடம் சந்திகளில் வீதி சமிக்கை விளக்குகளைப் பொருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும். 

என பொலிஸ் போக்குவரத்துப் பொலிசாரால் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இன்று மாலை யாழ்.மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற வீதி போக்குவரத்து 

நெருக்கடியை தவிர்ப்பதற்கான மாவட்ட கலந்துரையாடலின்போதே இவ்வாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

யாழ்.மாவட்டத்தில் இடம்பெறும் அதிகமான விபத்துகள் அதிக வேகம் காரணமாக இடம்பெறுகிறது. இதனைக் கட்டுப்படுத்துவதற்கு 

மக்கள் நடமாட்டம் அதிகரித்து சந்தி பகுதிகளில் சமிக்கை விளக்குகள் பொருத்த வேண்டும்.

மேலும் அதிக விபத்துக்கள் இடம்பெறும் பகுதிகளை அடையாளப்படுத்தி கண்காணிப்பதற்கு சிசிடிவி கமராக்கள் பொருத்த வேண்டும்.

இந்நிகழ்வில் கலந்து கொண்ட யாழ்.போதனா வைத்தியசாலையில் என்பு முறிவு வைத்திய நிபுணர் வைத்தியர் கோபி சங்கர் கருத்துத் தெரிவிக்கையில்,

வடமாகாணத்தில் கடந்த வருடமும் பல வீதி விபத்துக்களில் பதிவாகியுள்ள நிலையில் அதனை கட்டுப்படுத்துவதற்கு அனைத்து தரப்பினர்களும் 

 ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு