யாழ்.சாவகச்சோி - சங்கத்தானை பகுதியில் ரயிலுடன் மோதி பாடசாலை மாணவன் உயிரிழப்பு..!

ஆசிரியர் - Editor I
யாழ்.சாவகச்சோி - சங்கத்தானை பகுதியில் ரயிலுடன் மோதி பாடசாலை மாணவன் உயிரிழப்பு..!

யாழ்.சாவகச்சோி - சங்கத்தானை பகுதியில் புகைரத கடவையை கடக்க முயன்றபோது ரயிலுடன் மோதிய பாடசாலை மாணவன் ஒருவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளான். 

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிவந்து கொண்டிருந்த உருத்திராதேவி ரயிலுடன் மோதியே குறித்த மாணவன் உயிரிழந்துள்ளார். இன்று மாலை 6.15 மணியளவில் குறித்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரியில் உயர்தர வகுப்பில் கல்வி கற்கும் கொடிகாமத்தைச் சேர்ந்த உதயகுமார் பானுசன் (வயது 18) எனும் மாணவனே உயிரிழந்துள்ளார்.

குறித்த மாணவன் நாளை பாடசாலையில் நடைபெறும் பிரிவுபசார நிகழ்வுக்கு ஆடைகளைத் தைக்கச் சென்றபோதே இந்த அனர்த்தத்தை எதிர்கொண்டுள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு