தென்பகுதியிலிருந்து வந்த பொலிஸ் கான்ஷ்டபிள் ஒருவர் உட்பட 7 பேர் பொலிஸாரினால் கைது..!

ஆசிரியர் - Editor I
தென்பகுதியிலிருந்து வந்த பொலிஸ் கான்ஷ்டபிள் ஒருவர் உட்பட 7 பேர் பொலிஸாரினால் கைது..!

கிளிநொச்சி - இராமநாதபுரம் பகுதியில் புதையல் அகழ்வதற்காக இரு வாகனங்களில் வந்த 7 பேர் கொண்ட கும்பலை பொலிஸார் கைது செய்துள்ளனர். 

அவர்களிடமிருந்து புதையல் தேடுவதற்குப் பயன்படுத்தப்படும் ஸ்கானர் ஒன்றும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

கைதானவர்களில் ஒருவர் பொலிஸ் கான்ஷ்டபிள் என்று தெரியவந்துள்ளது. இராமநாதபுரம், சம்புக்குளம் பகுதியில் 

புதையல் அகழ வந்ததாக அவர்கள் விசாரணையின் போது தெரிவித்துள்ளனர். கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

குறித்த பகுதியில் புதையல் தோண்டும் முயற்சி தொடர்பில் பல்வேறு சந்தர்ப்பங்களில் கைதுகள் இடம்பெற்றிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

வடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்தில் தொடர்ந்தும் கேள்விக்குள்ளாகும் நினைவு கூறும் உரிமை !

மேலும் சங்கதிக்கு