யாழ்.நீர்வேலியில் பாடசாலை மாணவர்களை மோதி தள்ளிவிட்டு தப்பி ஓடிய மினி பஸ்..! இரு மாணவர்கள் உட்பட 3 பேர் படுகாயம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.நீர்வேலியில் பாடசாலை மாணவர்களை மோதி தள்ளிவிட்டு தப்பி ஓடிய மினி பஸ்..! இரு மாணவர்கள் உட்பட 3 பேர் படுகாயம்..

யாழ்.நீர்வேலி பகுதியில் பாடசாலை மாணவர்களை மோதி தள்ளிய தனியார் பேருந்து தப்பிச் சென்றுள்ள நிலையில் சம்பவத்தில் இரு மாணவர்கள் உட்பட 3 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

நீர்வேலி பூதவராயர்மடம் பகுதியில் இன்று திங்கட்கிழமை காலை 07 மணியளவில் இடம்பெற்ற குறித்த விபத்து சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குடும்ப பெண் ஒருவர் தனது மோட்டார் சைக்கிளில் 

தனது பிள்ளை உள்ளிட்ட இருவரை பாடசாலைக்கு அழைத்து சென்ற வேளை , பருத்தித்துறை வீதி வழியாக யாழ்ப்பாணம் நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து (மினி வான்) அவர்கள் மீது மோதி விபத்தினை ஏற்படுத்திவிட்டு 

அங்கிருந்து தப்பி சென்றுள்ளது. குறித்த விபத்தில் காயமடைந்த மாணவர்கள் இருவரும் , அவர்களை பாடசாலைக்கு அழைத்து சென்ற குடும்ப பெண்ணும் காயங்களுக்கு உள்ளான நிலையில், 

அங்கிருந்தவர்கள் மீட்டு கோப்பாய் வைத்திய சாலையில் அனுமதித்தனர். கோப்பாய் வைத்திய சாலையில் இருந்து மேலதிக சிகிச்சைக்காக அவர்கள் அங்கிருந்து யாழ்.போதனா வைத்திய சாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். 

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு